கோவையில் போதை மாத்திரை விற்பனை கும்பல் - கூண்டோடு தூக்கிய தனிப்படை போலீசார்!

கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த கும்பலை, தனிப்படை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர். விசாரணையில், கர்நாடாகவில் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகளை கொள்முதல் ஐந்து மடங்கு லாபத்துக்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.


கோவை: தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் புழக்கத்தினை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், போதை பொருள் விற்பனையை தடுக்க, போதை பொருள் விற்பனை கும்பலை பிடிக்க, போதை பொருள் பிரியர்களை அதிலிருந்து மீட்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோயமுத்தூரில் மாநகர காவல் ஆணையர்பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் நடத்தப்பட்டுவருகிறது.

அதன் ஒருபகுதியாக, போதை பொருள் புழக்கத்தை தடுக்க மாநகர காவல் ஆணையர்பாலகிருஷ்ணனின்உத்தரவின் அடிப்படையில், துணை ஆணையர் சந்தீஸ் மேற்பார்வையில், உதவி ஆணையர் ரவி தலைமையில் இன்பெக்டர் லதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் அடங்கிய தனிப்படை ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் போதைக்காக மாத்திரைகளை விற்பது குறித்து தகவல் கிடைத்தது. அங்கு தனிப்படை போலீசார் நடத்திய கண்காணிப்பில் சந்தேகத்திற்குரிய நான்கு பேர் பிடிபட்டனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், நான்கு பேரும் போதைக்காக வலிநிவாரணி உள்ளிட்ட மாத்திரைகளை விற்று வந்தது தெரியவந்தது.



இதையடுத்து, பிடிபட்ட முகமது தாரிக், நவாஸ், அல்மனார், கார்த்திகேயன் உள்ளிட்ட நான்கு போதை மாத்திரை வியாபாரிகளை பஜார் காவல் நிலைய தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, நைட்ரவேட் - 25 மாத்திரைகள், டைடால் 25 மாத்திரைகள், மிட்டீலம் 100 மாத்திரைகள், ப்ரோஸ் 4 மாத்திரைகள், ஊசி சிரஞ்சிகள் மற்றும் 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அந்த மாத்திரை எங்கிருந்து வந்தது ? பிரிஸ்கிரிப்சன் இல்லாமல் மாத்திரை எப்படி வாங்கப்பட்டன ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், கோயமுத்தூரில் பிரிஸ்கிரிப்சன் இல்லாமல் மருந்தகங்களில் மருந்து தரக்கூடாதென விடுத்த எச்சரிக்கையையடுத்து, மாத்திரைகளை வாங்க போதை பிரியர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் ஹூப்ளி என்ற இடத்துக்கு சென்று போதைக்காக வலி நிவாராணி, தூக்கம், மருத்துவ அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்ற மாத்திரைகள் உள்ளிட்டவைகளை வாங்கி வரும் இந்த கும்பல், அதை கோவையில் உள்ள போதைப் பிரியர்களிடம் 5 மடங்கு லாபத்திற்கு விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கல்லூரி மாணவர்கள், ஐ டி ஊழியர்கள் என பலர் இந்த மாத்திரைகளைப் பயன்படுத்திவருவதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போதை பொருள் புழக்கத்தை தடுக்கும் பொருட்டு தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பேர் கைதாகியிருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...