திருப்பூரில் மன அழுத்தத்தை குறைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி - அரசு மருத்துவமனை நோயாளிகள் பங்கேற்பு!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், 'நலமுடன் நோயாளிகள் வாழ நாலு வரிகள்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: இந்திய மருந்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், ‘நலமுடன் நோயாளிகள் வாழ நாலு வரிகள்’எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்திய மருத்துவ சங்க திருப்பூர் கிளை தலைவர் சரோஜா நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். டாக்டர் ரவிச்சந்திரன், டாக்டர் அருள்ஜோதி, சங்க செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.



‘ஒண்டர்புல் நம்பிகை’மையம் சார்பில், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள் மருத்துவமனையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், நோயாளிகளுக்கு, தங்களுக்கு இருக்கும் நோய் குறித்த பயத்தை எப்படி போக்குவது என்பது தொடர்பான அறிவுரைகளும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.



இதில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏராளமான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவாக மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...