கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் தார் சாலை பணி - மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் ரூ.5.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாவட்டம் தண்ணீர்பந்தல் பகுதியில் நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம் 32 வது வார்டு மற்றும் 37 வது வார்டுக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை, மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ5.28 கோடி மதிப்பீட்டில் 2.96 கிலோமீட்டர் நிலத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சாலை பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சாலையின் அகலம் மற்றும் தரம் குறித்தும் ஒப்பந்ததாரிடம் கேட்டறிந்தார்.

அதேபோல் விரைந்து பணிகளையும் முடித்து மக்கள் பயன்பாடுத்து கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் முத்து ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...