கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் தார் சாலை பணி - மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் ரூ.5.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாவட்டம் தண்ணீர்பந்தல் பகுதியில் நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம் 32 வது வார்டு மற்றும் 37 வது வார்டுக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை, மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ5.28 கோடி மதிப்பீட்டில் 2.96 கிலோமீட்டர் நிலத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சாலை பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சாலையின் அகலம் மற்றும் தரம் குறித்தும் ஒப்பந்ததாரிடம் கேட்டறிந்தார்.

அதேபோல் விரைந்து பணிகளையும் முடித்து மக்கள் பயன்பாடுத்து கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் முத்து ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...