பல்லடத்தில் பட்டப்பகலில் வீட்டின் ஓட்டைப்பிரித்து திருட முயற்சி - கையும் களவுமாக சிக்கிய திருடனால் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பட்டப் பகலில் நான்கு வீடுகளில் ஓட்டை பிரித்து அரிவாளுடன் திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய கூட்டாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சரோஜினி. இவரது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சரோஜினி கோவையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார்.



இதனை நோட்டமிட்ட திருடர்கள், இன்று பிற்பகல் 11 மணி அளவில் அவரது வீட்டின் ஓட்டை பிரித்து கையில் அரிவாளுடன் உள்ளே இறங்கியுள்ளனர்.



ஏதேச்சையாக சரோஜினியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், அவரது வீட்டிற்கு சென்றபோது சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்தபோது கையில் அரிவாளுடன் நின்ற திருடனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



உடனடியாக ஊர் மக்கள் திருடனை கையும் களவுமாக பிடித்துவைத்து, காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திருடனை கைது செய்து விசாரணைக்காக பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், வீட்டில் திருட முயன்றவன் மேட்டூரை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும், மாதப்பூர் அருகே நல்லா கவுண்டம்பாளையத்தில் பெயிண்டர் வேலை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தன்னுடன் தன் நண்பர்களும் திருட வந்ததாகவும், மேலும் மூன்று வீடுகளில் ரூபாய் 5000 திருடி உள்ளதாகவும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து பிடிபட்ட ஈஸ்வரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய ஈஸ்வரனின் கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அரிவாளுடன் வீட்டின் உள்ளே இறங்கி திருடர்கள் திருட முயன்ற சம்பவம் மாதப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....