கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்க தலைவராக 'அன்னலெட்சுமி' ராமசாமி தேர்வு!

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக அன்னலெட்சுமி ஓட்டலின் நிர்வாக இயக்குநர் ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.



கோவை: கோவை மாவட்ட ஹோட்டலியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு நிகழ்ச்சியும் கடந்த செவ்வாய்க்கிழமை (07.02.2023) நடைபெற்றது.



கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜோன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஹோட்டல் அன்னலெட்சுமியின் நிர்வாக இயக்குனர் K.A.ராமசாமி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



அதேபோல், ஹரி பவனம் ஹோட்டல்களின் நிர்வாக இயக்குனர் பாலச்சந்தர் ராஜு செயலராகவும் சங்க உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கோவிந்தராஜன் பொருளாளராக தொடர்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

சங்கத்தின் துணை தலைவர்களாக வஞ்சிமுத்து (பூமராங் ஐஸ் கிரீம்), மணிகண்டன் (ஸ்ரீ ஆனந்தாஸ்), காமராஜ் (பொள்ளாச்சி) மற்றும் கிருஷ்ணன் (மேட்டுப்பாளையம்) ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

மேலும், இணை செயலர்களாக ஜெகன் தாமோதரசாமி (ஸ்ரீ அன்னபூர்ணா), டேவிட் (கொக்கரக்கோ), ராஜன் (வளர்மதி ஹோட்டல்ஸ்), வெங்கடேஷ் (ஸ்ரீ ஆனந்தாஸ்) மற்றும் சுந்தரராகவன் (பொள்ளாச்சி) ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் 2023ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் பற்றி புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர் K.A.ராமசாமி மற்றும் செயலர் பாலச்சந்தர் ராஜு கூறியதாவது,

வரும் இரண்டு ஆண்டுகளில் சங்கத்தின் உறுப்பினர்களை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது.

அத்துடன் ஆண்டு முழுவதும் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் அடங்கிய நாட்காட்டியை ஏற்படுத்தவும், ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

சங்கம் சார்பில் மாரத்தான் போட்டிகள், ரத்த தான முகாம்கள், கிரிக்கெட் டீம் உருவாக்கி போட்டிகள் மற்றும் வரவிருக்கும் ஆண்டில் உணவு திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சங்கத்திற்கான மேம்படுத்தப்பட்ட புது இணையதள பக்கத்தை உருவாக்கவும், அதன் மூலம் உறுப்பினர்கள் தகவல்கள், சேர்க்கை மற்றும் சந்தா கட்டுதல் போன்ற பணிகளை எளிதாக்கப்பட உள்ளது.

அதேபோல் 2 ஆண்டுகளில் சங்கத்திற்கான புது அலுவலகத்தை கட்டவும் திட்டமிட்டுள்ளோம்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...