கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்க தலைவராக 'அன்னலெட்சுமி' ராமசாமி தேர்வு!

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக அன்னலெட்சுமி ஓட்டலின் நிர்வாக இயக்குநர் ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.



கோவை: கோவை மாவட்ட ஹோட்டலியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு நிகழ்ச்சியும் கடந்த செவ்வாய்க்கிழமை (07.02.2023) நடைபெற்றது.



கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜோன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஹோட்டல் அன்னலெட்சுமியின் நிர்வாக இயக்குனர் K.A.ராமசாமி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



அதேபோல், ஹரி பவனம் ஹோட்டல்களின் நிர்வாக இயக்குனர் பாலச்சந்தர் ராஜு செயலராகவும் சங்க உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கோவிந்தராஜன் பொருளாளராக தொடர்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

சங்கத்தின் துணை தலைவர்களாக வஞ்சிமுத்து (பூமராங் ஐஸ் கிரீம்), மணிகண்டன் (ஸ்ரீ ஆனந்தாஸ்), காமராஜ் (பொள்ளாச்சி) மற்றும் கிருஷ்ணன் (மேட்டுப்பாளையம்) ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

மேலும், இணை செயலர்களாக ஜெகன் தாமோதரசாமி (ஸ்ரீ அன்னபூர்ணா), டேவிட் (கொக்கரக்கோ), ராஜன் (வளர்மதி ஹோட்டல்ஸ்), வெங்கடேஷ் (ஸ்ரீ ஆனந்தாஸ்) மற்றும் சுந்தரராகவன் (பொள்ளாச்சி) ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் 2023ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் பற்றி புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர் K.A.ராமசாமி மற்றும் செயலர் பாலச்சந்தர் ராஜு கூறியதாவது,

வரும் இரண்டு ஆண்டுகளில் சங்கத்தின் உறுப்பினர்களை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது.

அத்துடன் ஆண்டு முழுவதும் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் அடங்கிய நாட்காட்டியை ஏற்படுத்தவும், ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

சங்கம் சார்பில் மாரத்தான் போட்டிகள், ரத்த தான முகாம்கள், கிரிக்கெட் டீம் உருவாக்கி போட்டிகள் மற்றும் வரவிருக்கும் ஆண்டில் உணவு திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சங்கத்திற்கான மேம்படுத்தப்பட்ட புது இணையதள பக்கத்தை உருவாக்கவும், அதன் மூலம் உறுப்பினர்கள் தகவல்கள், சேர்க்கை மற்றும் சந்தா கட்டுதல் போன்ற பணிகளை எளிதாக்கப்பட உள்ளது.

அதேபோல் 2 ஆண்டுகளில் சங்கத்திற்கான புது அலுவலகத்தை கட்டவும் திட்டமிட்டுள்ளோம்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...