துடிப்புடன் இருந்த இருதயத்தில் குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆசிய அளவில் கேஎம்சிஎச் சாதனை


கோவையைச் சேர்ந்த கேஎம்சிஎச் மருத்துவமனையில் துடித்துக்கொண்டிருந்த இதயத்தில் இருதய வால்வு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மருத்துவமனைத் தரப்பில் ஆசிய அளவில் இச்சிகிச்சை தற்போதே முதன்முறையாக நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது.

இன்று காலை இதுகுறித்து கேஎப்சிஎச் தலைவர் நல்ல ஜி.பழனிச்சாமி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

இந்த அறுவை சிகிச்சை கேஎம்சிஎச் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். அரோட்டிக் வால்வு ஸ்டெனோசிஸ் நோயைக் குணப்படுத்துவதில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். 

அமெரிக்காவில் இதுவரை 7-8 மனிதர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவில் கேஎம்சிஎச் மருத்துவமனை இதில் முன்னோடியாக தற்போது இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையின் வெற்றிச்சதவிகிதம் 90 முதல் 95 சதவிகிதம் ஆகும். வயதாகும் போது இருதயத்தில் உள்ள இரத்தக்குழாய்கள் கடிணமாக மாறுகின்றன. இந்த 76 வயது நோயாளி இதற்கு முன்னரே இருதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளார். எங்கள் மருத்துவமனையில் உள்ள நிபுனர்கள் வெனிபிரி வால்வை பொருத்துவதே இதற்கு சிறப்பான சிகிச்சையாக இருக்கும் என்று பரிந்துரை செய்தனர்.

எங்களுடையே முதல் முயற்சியிலேயே இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமைந்துள்ளது. தற்போது நோயாளி சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களிலேயே நடக்கத் துவங்கிவிட்டார்" என தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இருதய சிகிச்சை நிபுனர் மருத்துவர் தாமஸ் அலெக்ஸ்சான்டர் மற்றும் இருதய சிகிச்சை பிரிவின் இயக்குநர் பிரசாந்த் வைஜனாத் ஆகியோரை நல்ல ஜி.பழனிச்சாமி பத்திரிகையாளர்கள் மத்தியில் அறுமுகம் செய்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...