ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி அகடமிக் எக்ஸலன்ஸ் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி டெல் இஎம்சி சென்டர் ஆப் அகடமிக் எக்ஸலன்ஸ் இன் டேட்டா சையின்ஸ் அன்டு பிக் டேட்டா அனலட்டிக்ஸ்- ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது.



கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழக அளவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியே முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இக்கல்லூரி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை ஐசிடி அகடமி ஆப் தமிழ்நாடு வழங்கியுள்ளது.

டெல் டெக்னாலஜிஸ் சமீபத்தில் இம்சி கார்ப்பரேஷனை வழங்கியது. அது முதல் டெல் இஎம்சி சென்டர் ஆப் அகடமிக் எக்ஸலன்ஸ் இன் டேட்டா சையின்ஸ் அன்டு பிக் டேட்டா அனலட்டிக்ஸ் மையங்களை தமிழகத்தில் 5 கல்வி நிறுவனங்களில் இதுவரை நிறுவியுள்ளது. இந்திய அளவில் 50 கல்வி நிறுவனங்களில் இம்மையம் நிறுவப்பட்டுள்ளது.



ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் அகடமிக் எக்ஸலன்ஸ் மையத்தை ஏன்செட் இந்தியா நிறுவனத்தின் கல்வி நிறுவனங்களின் தொடர்பு பிரிவின் தலைவர் அபிஜித் ஸ்ரீனிவாஷ் தொடக்கி வைத்தார். டெல் நிறுவனத்தைச் சேர்ந்த துணைப் பொது மேலாளர் ஜி.சரவணன், இம்மையத்திற்கான பொருப்பினை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் செயளர் சுவாமி கரிஸ்தானந்தா-விடம் ஒப்படைத்தார்.

இக்கல்லூரியின் முதல்வர் சி.ஜெயபாலகிருஷ்ணன், இயக்குனர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் கணினி அறிவியல் துறை டீன் மற்றும் தலைவர் கந்தப்பன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.



Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...