ஹூண்டாய் கார் கம்பெனியுடன் எக்ஸெல் பாலிடெக்னிக் கல்லூரி உடன்பாடு

நாட்டில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வரும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், நாமக்கல் எக்ஸெல் பாலிடெக்னிக் கல்லூரியில் “ஹூண்டாய் தொழில் மேம்பாட்டு மையம்” ஒன்றை துவக்கியுள்ளது.

நிறுவனங்களின் சமுதாய பொறுப்புகளின் ஒரு பகுதியாக ஹூண்டாய் நிறுவனம், தரமான கல்வியுடன், கார், இன்ஜின், கியர் பாக்ஸ் மற்றும் கல்வி உபகரணங்களுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை வழங்க முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக நாமக்கல் எக்ஸெல் பாலிடெக்னிக் உடன் இணைந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் இன்டியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஒய்.கே கூ இதுகுறித்து கூறுகையில், “எக்ஸெல் பாலிடெக்னிக் உடன் இணைந்து, ஒரு பொறுப்புள்ள நிறுவன குடிமகனாக திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆட்டோமொபைல் சேவை ஆலோசகர்களை உருவாக்கும் இந்த மையம், மாணவர்களுக்கு நவீன வாகன தயாரிப்பு தொழில் நுட்பங்களை வழங்குவதோடு, வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தரும்,” என்றார்.

புதிய பாடத்திட்டம் மற்றும் பயிற்சிகள், ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்துக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும். பாலிடெக்னிக் கல்லூரியில் திறமையானவர்களை உருவாக்குவதோடு, இந்திய வாகன சேவை தொழிலுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

நிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்வின் கீ்ழ், திறன் மேம்பாட்டு பயிற்சியானது முதல்முறையாக 2012ம் ஆண்டு ஐடிஐ பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி அளித்தது. தற்போது நாடு முழுவதும் 38 ஐடிஐ-க்களைக் கொண்டுள்ளது.

மாநிலத்துக்கு குறைந்தபட்சம் ஒரு ஐடிஐ உடன், பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டில் பயிற்சி பெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் பயின்றோரில் 95 சதவீதத்தினருக்கு ஹூண்டாய் டீலர்களிடம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் ஐடிஐக்களில் படித்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பயனடைந்துள்ளனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...