சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு - ஈஷாவில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணி தீவிரம்!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ பங்கேற்கவுள்ளார். இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈஷா யோகா மையத்ததில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.



கோவை: கோவை ஈசா யோகாவில் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ கலந்து கொள்ள உள்ளார்.

இதையொட்டி, 18 ஆம் தேதி மாலை 3 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமான மூலம் அவர் கோவை விமான நிலையம் வருகிறார்.

முதல் முறையாக கோவை வரும் குடியரசு தலைவர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார்.

பின்னர் வடவள்ளி, தொண்டாமுத்தூர் வழியாக ஈசா யோகா மையத்திற்கு செல்கிறார்.

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு செல்லவுள்ள சாலைகளை ஐஜி சுதாகர் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஸ்ணனுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதுமட்டுமின்றி, குடியரசு தலைவர் வருகையையொட்டி சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ வருகையை ஒட்டி ஈசா யோகா மையத்தில் ஹலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...