பல்லடத்தில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து அரிவாள் முனையில் பணம் கொள்ளை - தொடர் கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதி!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நள்ளிரவில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பெரும்பாலி பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி. ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான ஜெயமணி, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு ஜெயமணி தனது மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தம் கேட்டதால் கதவை திறந்து பார்த்துள்ளார்.



அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் கையில் அரிவாளுடன் ஜெயமணியை மிரட்டி பீரோ சாவியை வாங்கி, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது பேரனின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஜெயமணி புகார் அளித்துள்ளார்.



இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் அரிவாலுடன் வீட்டுக்குள் புகுந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பல்லடம் பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...