உடுமலையில் மூங்கில் தயாரிப்பு பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்க உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மூங்கிலால், தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளித்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதியில், விவசாய சாகுபடி பணிகளில், மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தன. விதை துாவுதல், அறுவடையின் போது விளைபொருட்களை சேகரித்தல், தானியங்களை சுத்தப்படுத்துதல் உட்பட அனைத்துப்பணிகளுக்கும், மூங்கில் கூடைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தக்காளி பழங்களை, மூங்கில் கூடையில் அடுக்கி, சந்தைகளுக்கு எடுத்துச்செல்வார்கள். இவ்வாறு, ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் தவிர்க்க முடியாத பயன்பாட்டில் இருந்தன. பின்னர், பிளாஸ்டிக் பெட்டிகள் வேளாண் அறுவடை பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டது.



மக்காச்சோளம் மற்றும் இதர தானிய சாகுபடிகளிலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்தது. இதனால், மூங்கில் கூடை பயன்பாடும், உற்பத்தியும் குறைந்து, தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், உடுமலை நகரிலுள்ள தொழிலாளர்கள், பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் தொழிலை கைவிடாமல், உற்பத்தி பொருளையும் மாற்றி, வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர்.



தொழிலாளர்கள் கூறுகையில், கூடைகள் தயாரிப்பில், மூலப்பொருளான மூங்கில் கிடைப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது. இருப்பினும், புதிய வகை பொருட்கள் தயாரிப்பால், தொழிலை கைவிடாமல், தொடர்கிறோம்.

கண்காட்சி மற்றும் இதர வணிக பகுதியில், மூங்கிலால் ஆன பொருட்களை விற்பனை செய்ய, அரசு எங்களுக்கு தனியாக கடை ஒதுக்கினால், மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். விவசாயிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, மூங்கில் கூடைகளை பயன்படுத்தினால், எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்,' என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...