ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்..! - பொள்ளாச்சி எம்.எல்.ஏ.ஜெயராமன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கப்பளாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பனூர்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மதுரைவீரன் கோயில் வரை ரூபாய் 5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட்- கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.



இதில், முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முதன் முறையாக திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் மாபெரும் வெற்றி பெற்றதுபோல, தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடியார் பக்கம் உள்ளது.

நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி, என்றார்.

எத்தனை அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தாலும் பொய் வதந்திகளை பரப்பினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள். இறுதி எஜமானர்கள் மக்கள்தான். நிச்சயம் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்வார்கள்., என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...