நீலகிரியில் அரிய டிரவ்ட் வகை மீன்குஞ்சு பொறிப்பகம் நவீனமயம் - ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு!

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் உள்ள மீன்வளத்துறைக்கு சொந்தமான பண்ணை சீரமைப்பதற்கு தமிழக அரசு ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் நேரில் ஆய்வு செய்து பண்ணையை சீரமைப்பது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. 1907 -ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த மீன் பண்ணையில், அழிவின் விளிம்பிஸ் உள்ள அரிய வகை டிரவ்ட் மீன்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் உற்பத்தி செய்து வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஆண்டு முழுவதும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வரும் இந்த பண்ணை, கடந்த 2019 ஆம் ஆண்டு பெய்த கனமழை வெள்ளப்பெருக்கில் அதிக சேதம் அடைந்தது.

கடந்த 4 ஆண்டுகளாக நிதி ஒதுக்கப்படாததால் இந்த மீன் பண்ணை பராமரிப்பின்றி காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போதைய தமிழக அரசு அந்த பண்ணையை சீரமைத்து நவீனமயமாக்க முடிவு செய்து, அதற்கென ரூ. 2.5 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது.



இந்த நிதியின்மூலம் தடுப்பணைகள் கட்டுவது, குஞ்சு பொறிப்பகத்தை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.



முதற்கட்டமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் கோக்கர்நாத் அரசு மீன் பண்ணையிலிருந்து 20 ஆயிரம் ட்ரவுட் மீன் குஞ்சுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.



இதனை, மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் நேரில் ஆய்வு செய்து பண்ணையை சீரமைப்பது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...