கோவை அருகே ஷேர் ஆட்டோ மீது காய்கறி ஏற்றிவந்த வாகனம் மோதி விபத்து - தம்பதி படுகாயம்!

கோவை வடவள்ளி அருகே சாலையில் சென்ற பயணிகள் ஆட்டோ மீது காய்கறி லோடு ஏற்றி வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.


கோவை பவானி வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி சந்திரா. பொன்னுசாமி பயணிகள் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், பொன்னுச்சாமியும், மனைவி சந்திராவும் வடவள்ளியில் இருந்து தொண்டாமுத்தூர் நோக்கி ஆட்டோவில் சென்றதாக தெரிகிறது.



அப்போது, எதிரே அதிவேகமாக காய்கறி லோடு ஏற்றி வந்த டாடா ஏஸ் வாகனம், பொன்னுசாமி வந்த ஆட்டோ மீது மோதியது.



இதில், ஆட்டோ நிலைக்குலைந்தது தூக்கி வீசப்பட்டதில் பொன்னுச்சாமி , சந்திரா ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த கவுன்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மயில்சாமி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...