கோவை ரயில் நிலையத்தில் மொபைல் செயலி வழியே ஆட்டோ புக்கிங் சேவை துவக்கம்

தமிழகத்தில் முதன் முறையாகக் கோவை ரயில் நிலையத்தில் வாட்ஸ்ஆப் மற்றும் QR ஸ்கேன் வாயிலாக ஆட்டோ புக் செய்யும் 'ஊர் கேப்ஸ்' வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ள ஆன்லைன் ஆட்டோ புக்கிங்க் வசதி மூலம் பயணிகள் தங்களுக்கான ஆட்டோவை பேரம் பேசாமல் புக் செய்து பயணிக்க இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் ரயில் நிலைய சந்திப்பில் செயலி(App) வழியே ஆட்டோ புக் செய்யக்கூடிய வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான பணிகளை சேலம் கோட்டத்தை சேர்ந்த வணிகப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வந்த நிலையில், கோவையில் செயல்பட்டு வரும் 'ஊர் கேப்ஸ்' நிறுவனம் இதற்கான ஆணையைப் பெற்றுள்ளது.

கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள இரண்டாவது நுழைவாயிலில் இந்த சேவைக்கான கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் பயணிகள் தங்களுக்கான ஆட்டோவை பேரம் பேசாமல் புக் செய்து பயணிக்க இயலும்.



முன்னதாக இந்த சேவையை தெற்கு ரயில்வே முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் (சேலம் கோட்டம்) ஹரிகிரிஷ்ணன் துவக்கி வைத்தார். உடன் ஊர் கேப்ஸ் தலைமை செயல் அதிகாரி மரிய ஆண்டனி உடனிருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...