குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் சுகாதாரத் துறையின் சார்பில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் பெதப்பம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்குத் துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் சாதிக் பாட்சா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சிவகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர பாண்டியன் பேசியதாவது, கிராமப்புறங்களில் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதார பணிகளை மேற்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான ஊதியம் குடிமங்கலம் ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இதைத் தவிர்த்து சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் சுகாதாரத் துறையின் சார்பில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இந்தக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம், திவ்யா, முருகன், முருகானந்தம், செல்வராஜ் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...