கோவை சம்பள உயர்வு பிரச்சனை - தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்!

கோவையில் சம்பள உயர்வு அறிவிப்பை அமல்படுத்த வலியுறுத்தி, இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.



கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினமும் 721 ரூபாய் ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



3வது நாளாக நீடிக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் பங்கேற்றுள்ளனர்.



இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 3வது நாளாகத்தொடரும் இந்தப் போராட்டத்தால், மருத்துவமனைகளில் நோயாளிகளை வார்டுகளுக்கு அழைத்துச் செல்வது, அவசர சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியத்தை கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...