உடுமலையில் சின்னவெங்காய அறுவடைப் பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம். வெங்காயத்தை இருப்புவைத்து விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் கிணற்றுப் பாசனம் மூலம் சொட்டு நீர் அமைத்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.



விலை ஏற்ற இறக்கங்களை பொருத்தே சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் இதை சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

வெங்காயம் விதை மூலம் நாற்றங்கால் அமைத்த 40 நாட்களுக்கு பிறகு, அவற்றை பிடுங்கி நடவு செய்தும், விதை வெங்காயம் வாங்கியும் சாகுபடி செய்யப்படுகிறது.



இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:

ஒரு ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். ஒரு ஏக்க ருக்கு உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், தண்ணீர் திருப்புதல் என ரூ.60 ஆயிரம் முதல் ரூ. 70ஆயிரம் வரை செலவாகிறது.

சின்ன வெங்காயம் 60 முதல் 65 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். சின்ன வெங்காயம் 4 முதல் 5 மாதங்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் விலை குறைவான நேரங்களில் இருப்பு வைத்து, விலை அதிமாகும் நேரங்களில் விற்பனை செய்கிறோம். இதனால், விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்து வருகிறது.

சின்ன வெங்காயம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்போது அறுவடை செய்யப்படுகிறது.அறுவடை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் வெயிலில் உலர வைக்கப் பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...