நீலகிரியில் 18வது ரோஜா கண்காட்சி ஏற்பாடு தீவிரம் - ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணி தொடக்கம்!

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள 18-வது ரோஜா கண்காட்சிக்காக 32 ஆயிரம் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி இன்று தொடங்கியது.


நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா நகரமான உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் ஆகும். அப்போது, உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி போன்றவைகள் நடத்தப்படுவது வழக்கம்.



இந்த நிலையில், உதகை அரசு ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி மே மாதம் நடைப்பெற உள்ளது. இதனையடுத்து ரோஜா பூங்காவில் உள்ள 4201 வகைகளில், 32 ஆயிரம் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி இன்று தொடங்கியது. இந்தப் பணியினை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித்தொடங்கி வைத்தார்.



இந்த கவாத்து செய்யும் பணி ஒரு வார காலத்திற்கு நடைபெற உள்ளது. தற்போது, கவாத்து செய்யும் ரோஜா செடிகள் மீண்டும் நன்றாக வளர்ந்து, வருகின்ற ஏப்ரல் மாதத்தில் ரோஜா மலர்களை பூக்கத் தொடங்கிவிடும்.



கோடை சீசனுக்கு உதகை வரும் சுற்றுலாப் பயணிககள், ரோஜா மலர் கண்காட்சியில்பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான ரோஜா மலர்களை கண்டு ரசிக்கும் வகையில் இந்தபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...