உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் - தென்னை விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

பேச்சுவார்த்தையில், கூலி விவகாரத்தில் பழைய நிலை தொடர்வது, உள்ளூர் தொழிலாளர்களை அதிகளவில் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

உடுமலை மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மத்தியில் வடமாநில தொழிலாளர் வருகை, கூலி சம்பந்தமாக பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தது.



அதன் தொடர்ச்சியாக சில சச்சரவுகள் தொடர்ந்த நிலையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணஉடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.



இதில் வருவாய் கோட்டாச்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை துணைக்காவல் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல், தளி காவல்நிலைய ஆய்வாளர் ராஜாகண்ணன் முன்னிலையில் இந்த அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில், விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆ.பாலதண்டபாணி, ஏ.ராஜகோபால், S.பரமசிவம், சிங்காரம் உள்ளிட்டோரும், வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்குமார், அருண், கார்த்திகேயன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மேலும், சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் ஜெகதீஷ், ரங்கநாதன், தர்மன், ஜெயக்குமார், மகுடீஸ்வரன் தென்னை பேரவை சார்பில் சக்தி, தர்மர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பல்வேறு சுமூக முடிவுகள் எட்டப்பட்டன. அவை,

1) கடந்த நாட்களில் கூலி விவகாரத்தில் என்ன நிலை இருந்ததோ அதனை அப்படியே தொடர்வது... தேங்காய் விலை சீரமைந்த பின் கூலி இறுதி செய்வது குறித்து பேசிக்கொள்வது.

2) சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகாத வண்ணம் அனைவரும் நடந்து கொள்வது.

3) வியாபாரிகள்உள்ளூர் தொழிலாளிகளை தங்கள் வேலைக்கு கூடுதலாக பயன்படுத்திக்கொள்வது.

4) சமூக ஊடகங்கள் மூலமாக தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் வதந்திகளை பரப்பக்கூடாது.

இவ்வாறான மேற்கண்ட முடிவுகளை அனைவரும் அமுல்படுத்துவது என தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் இடையேயான பேச்சு வார்த்தையில் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...