கிணத்துக்கடவு அருகே நாய் குறுக்கே வந்ததால் விபத்து - அதிமுக நிர்வாகி உயிரிழந்த சோகம்!

கோவை கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பிரிவில் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பு கம்பி மீது மோதிய விபத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணத்துக்கடவு அடுத்த திரு.வி.க வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62). இவர் அதிமுக கட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி 5-வது வார்டு கிளைத் தலைவராக உள்ளார்.

இவருக்கு ஈஸ்வரி (52)என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகுமார் நேற்று மாலை கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பிரிவு பகுதியில் கோவை - பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் இருசக்கர வாகனத்தில்தனது நண்பர் ரமேசுடன் சென்றுள்ளார்.

இருசக்கர வாகனத்தை கிருஷ்ணகுமார் ஓட்டிச் சென்ற நிலையில், திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அப்போது, நாயின் மீது இருசக்கர வாகனம் மோதிய நிலையில், கிருஷ்ணகுமார் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.



விழுந்த வேகத்தில் சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பு கம்பியில் மோதியதில் படுகாயமடைந்த கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த ரமேஷ் சாதாரண காயத்துடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...