பல்லடம் அருகே தனியார் மில்லில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின

பல்லடம் அடுத்த முத்தாண்டி பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், நூல்கள், பஞ்சுகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகின.



பல்லடம் அருகேயுள்ள முத்தாண்டிபாளையம் கிராமத்தில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான எஸ்.பி.ஆர் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென இந்த நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது.



நூற்பாலையில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் நூற்பாலையில் இருந்த நூல்கள், பஞ்சுகள் என அனைத்தும் கருகி சேதமடைந்துள்ளன. மேலும் மீதமூள்ள நூல் மற்றும் பொருட்களை தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றினர்.

நூற்பாலை முழுவதும் ஏற்பட்ட இந்த தீவிபத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது தீ விபத்துக்கான காரணம் என்ன குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...