உடுமலையில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி நிலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை உரிமையாளர் ஒப்படைக்காமல் இருந்த நிலையில், ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை நகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

உடுமலை நகராட்சி பழனி சாலைக்கு அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் கல்யாணி அம்மாள் லே அவுட் அமைந்துள்ளது. இங்கு நகர ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10.31 ஏக்கர் பரப்பளவில் உருவான மனைப்பிரிவின் நிலப்பரப்பில் குறிப்பிட்ட அளவு நிலம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.

அந்த வகையில் 76.61 சென்ட் சமுதாய நலக் கூடத்திற்கும், 11.69 சென்ட் வாசகர் அறை பயன்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டு வகைப்பாடு செய்யப்பட்டது. இந்த இடத்தை அதன் உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.



இந்த இடத்தை நகராட்சியால் சுவாதீன படுத்தப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் யாரும் இந்த இடங்களை கிரயம் செய்ய வேண்டாம் என நகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இந்த இடத்தின் மொத்த மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.



இதுபோல உடுமலை நகராட்சியால் மனை பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள் ஒப்படைக்காமல் இருந்ததால் அவற்றை சுவாதீனப்படுத்த நகராட்சி நிர்வாகம் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...