நீலகிரி முதுமலை தெப்பக்காடு பகுதியில் உலா வந்த புலி - பொதுமக்கள் அச்சம்!

முதுமலை தெப்பக்காடு பகுதியில் சமீபத்தில் பெண் ஒருவரை புலி அடித்து கொன்ற நிலையில், தெப்பக்காடு ஆற்றங்கரையோரத்தில் புலி ஒன்று உலா வந்ததை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் உலா வந்த புலியால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

முதுமலை தெப்பக்காடு அடுத்த யானைபாடி பகுதியை சேர்ந்த மாரி என்ற பெண்மணி வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற போது, புலி தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெப்பக்காடு, யானைப்பாடி பகுதியில் புலியை கண்காணிக்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் 4 புலிகள் நடமாடுவது கேமராவில் பதிவான நிலையில் பெண்ணை தாக்கிய புலி எது என கண்டறிய வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.



இதனிடையே நேற்று மாலை தெப்பக்காடு ஆற்றங்கரையோரம் புலி உலா வந்ததுள்ளது. இதை கண்ட கிராமத்தினர் பெண்ணை தாக்கிய புலியாக இருக்கலாம் என மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், புலா உலா வந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...