கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதியில் பற்றி எரிந்த மரத்தால் பரபரப்பு

மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் உள்ள கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை ஓரத்திலிருந்த பச்சை மரம் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு.



கோவை: கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதி அருகே பற்றி எரிந்த மரத்தை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கல்லார் தூரி பாலம் அருகே 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாலையோர மரம் ஒன்று உள்ளது.

இந்த மரத்தின் அருகே கல்லார் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி வருவது வழக்கம்.இந்த நிலையில் இன்று மாலை மரத்தின் அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பைகளிலிருந்து புகை வரத் தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் பச்சை மரம் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.

மரத்தில் தீ மளமளவெனப் பரவி பற்றி எரிய ஆரம்பித்தது. இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும், மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரினை பீய்ச்சி அடித்து மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

மரத்தின் அடியில் குப்பைகள் கொட்டிய இடத்தில் யாரோ தீ வைத்த உள்ளனர்.அதன் காரணத்தால் மரம் தீ பிடித்து எரிந்து உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் உதகை சாலையில் திடீரென பச்சை மரம் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...