கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதியில் பற்றி எரிந்த மரத்தால் பரபரப்பு

மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் உள்ள கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை ஓரத்திலிருந்த பச்சை மரம் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு.



கோவை: கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதி அருகே பற்றி எரிந்த மரத்தை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கல்லார் தூரி பாலம் அருகே 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாலையோர மரம் ஒன்று உள்ளது.

இந்த மரத்தின் அருகே கல்லார் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி வருவது வழக்கம்.இந்த நிலையில் இன்று மாலை மரத்தின் அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பைகளிலிருந்து புகை வரத் தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் பச்சை மரம் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.

மரத்தில் தீ மளமளவெனப் பரவி பற்றி எரிய ஆரம்பித்தது. இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும், மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரினை பீய்ச்சி அடித்து மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

மரத்தின் அடியில் குப்பைகள் கொட்டிய இடத்தில் யாரோ தீ வைத்த உள்ளனர்.அதன் காரணத்தால் மரம் தீ பிடித்து எரிந்து உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் உதகை சாலையில் திடீரென பச்சை மரம் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...