ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்.வேட்பாளருக்கு ஆதரவு - இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பது என்றும், பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என்றும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு.


திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் 5 ஆயிரம் வழங்க வேண்டும், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பது என்றும், பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும், பெதம்பம்பட்டி அருகே தனியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் செயல்படும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாநில செயற்குழு உறுப்பினருமான குணசேகரன் மற்றும் அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...