முதல்வர் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டி - உடுமலை அரசுக் கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

திருப்பூரில் முதலமைச்சர் கோப்பைக்காக நடத்தப்பட்ட கைப்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகை, கோப்பை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டிகள் நடைபெற்றது.

இதில், 14 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள்கலந்துகொண்டு விளையாடின. இறுதிப் போட்டியில், உடுமலை அரசு கலைக் கல்லூரி அணி மற்றும் KGI கலைஅறிவியல் கல்லூரி அணி மோதின.

முதல் சுற்றில், 25-18, 2வது சுற்றில் 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் உடுமலை அரசு கலைக் கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

இதைத்தொடர்ந்து, உடுமலை அரசு கலைக் கல்லூரி அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி முதல்வர் கல்யாணி, உடற்கல்வி இயக்குநர் மனோகர் செந்தூர் பாண்டியன், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற அணியின் வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...