கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சியில் நாளை நடக்கும் மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்,‌ சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, பாதாளச் சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிட வரி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் நேரில் அளிக்கலாம்.


கோவை: கோவை மாநகராட்சியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில் நாளை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி அலுவலகத்தில்‌ நாளை (14.02.2023) செவ்வாய்க்கிழமை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌ சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, பாதாளச் சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிட வரி,பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம்‌ அளித்துப் பயன்பெறலாம்‌. மேலும்‌, இக்கோரிக்கை மனுக்களின்‌ மீது துறை சார்ந்த மாநகராட்சி அலுவலர்களால்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

எனவே, இந்த மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்திற்கு வரும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துப் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...