கோவை மாநகராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்தில் கோல்டுவின்ஸ், நேருநகர், ஆர்.ஜி.புதூரில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி, குப்பை தரம் பிரிக்கும் பணி உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பகுதியில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 7ஆவது வார்டு பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது கோல்டுவின்ஸ் சாலையில் ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



இதேபோல் நேரு நகர் கிழக்குப் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரித்துச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததைப் பார்வையிட்ட அவர், இது குறித்தான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனத் தூய்மை பணியாளர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் ஆர்.ஜி புதூர் லட்சுமி நகர் பகுதியில் நடைபெற உள்ள மழைநீர் வடிகால் அமையும், இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், உதவி ஆணையர் முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...