உடுமலை அருகே வறண்ட நிலத்தில் வசிக்க அனுமதி வழங்க கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மனு

உடுமலை அருகே நீர்வரத்து இன்றி, வறண்ட நிலமாக காட்சி அளிக்கும் கண்ணாநாயக்கர்குளம் பகுதியில் அருந்ததியினர் மக்கள் வசிக்க அனுமதி வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அருந்ததியர் இன மக்கள் 50 பேர் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நீர்வரத்து இல்லாமல் வறண்டு காட்சியளிக்கும் நிலத்தில் வசிக்க அனுமதியளிக்க கோரி அருந்ததியின மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



உடுமலை அடுத்த லிங்கமநாய்க்கன் புதூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த அருந்ததியர் இன மக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் 10 வருட காலமாக வசிக்க இடமில்லாமல் கூட்டு குடும்பமாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நீர்வரத்து இன்றி, வறண்ட நிலமாக காட்சி அளிக்கும் கண்ணாநாயக்கர்குளம் பகுதியில் அருந்ததியினர் இன மக்கள் வசிக்க அனுமதி வழங்க கோரி, வடுகபாளையம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில், நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலமாக காட்சியளிக்கும் இவ்விடத்தில் அருந்ததியர் மக்கள் வசிப்பதற்கு அனுமதி வழங்க கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...