கோவை ரயில் நிலையத்தில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது

கோவை ரயில் நிலையத்தில் நின்ற நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் பயணியிடம் லேப்டாப் மற்றும் ரூ.4 ஆயிரம் பணத்தை திருடிய கேரளா இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் லேப்டாப் திருடிய வாலிபரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலசுப்பிரமணி (50). இவர் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் பலசுப்பிரமணி சொந்த ஊர் செல்ல நேற்று தனது நண்பரான விஜய் என்பவருடன் கோவை ரயில் நிலையம் வந்தார்.

அப்போது அவரது உடைமைகளை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் இருக்கையில் வைத்து விட்டு, கிழே இறங்கிச் சென்று நண்பருடன் பேசி விட்டு உள்ளே வந்து பார்த்த போது அவரது லேப்டாப் பை மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ரயில் நிலையத்தைக் கண்காணித்த போது 5ஆவது நடைமேடையில் லேப்டாப் பையுடன் சென்ற இளைஞரைப் பிடித்த விசாரித்த போது, லேப்டாப் திருடியது தெரியவந்தது.

மேலும் அவரிடம் போலீசார் விசாரித்ததில், கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சியாஸ் (20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து லேப்டாப் மற்றும் ரூ.4 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்து சியாஸை கைது செய்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...