பேரூர் பெரியகுளத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம் - மருந்தக உரிமையாளருக்கு அபராதம்

கோவை பேரூர் பெரியகுளத்தில் தடையை மீறி மருத்துவ கழிவுகளைக் கொட்டிய தனியார் மருந்தக உரிமையாளருக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.



கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குளத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டியவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் இயங்கி வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேரூர் பெரிய குளக்கரையில் மாயாவாக்கி (அடர்வனம்) முறையில் மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று வழக்கம் போல மரக்கன்றுகள் பராமரிப்பு பணிக்காக அவ்வமைப்பினர் சென்ற போது, குளக்கரையில் மாத்திரைகள், மருந்து என மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தன்னார்வலர்கள் உடனடியாக அவற்றைப் புகைப்படம் எடுத்து, பேரூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். மேலும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்திலிருந்த தனியார் மருந்தக ரசீதுகளை ஒப்படைத்தனர்.



இதையடுத்து விசாரித்த செயல் அலுவலர் ஸ்ரீ அழகு பார்மா என்ற தனியார் மருந்தகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்நிலையில் பேரூர் பெரிய குளக்கரையில் மருத்துவ கழிவுகளைக் கொட்டிய மருந்தக உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதாரத்துறை அதிகபட்ச அபராதம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...