மகா சிவராத்திரி விழா - ஆட்டம், பாட்டம் என அதிரடியாக நடத்த தயாராகும் ஈஷா!

கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழாவிற்காக தமிழ் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் உள்பட பல்வேறு மொழி பாடகர்கள் மற்றும் நடன குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை ஈஷா மையத்தில் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாசிவராத்திரி விழாவை கோலாகலமாக நடத்த ஈஷா அமைப்பு தயாராகி வருகிறது.

இதுதொடர்பாக ஈஷா யோகா மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உலகில்‌ வேறு எந்த கலாச்சாரத்திலும்‌ இல்லாத வகையில்‌, நம்‌ தமிழ்‌ கலாச்சாரத்தில்‌ தான்‌ 'நடனம்‌ ஆடும்‌ ஒருவரை' கடவுளாகவும்‌ யோகியாகவும்‌ போற்றி கொண்டாடுகிறோம்‌.

இந்த முழு பிரபஞ்சமே ஒரு விதமான நடனத்தில்‌ இயங்குகிறது என நவீன அறிவியலாளர்கள்‌ கண்டறிந்துள்ளனர்‌. இதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உள்நிலையில்‌ உணர்ந்த யோகிகள்‌ பிரபஞ்ச கூத்தனான சிவனுக்கு சிதம்பரத்தில்‌ கோவில்‌ கட்டியுள்ளனர்‌.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்‌ மண்ணில்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழா கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மிக விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. சிவனுக்கு உகந்த இந்த ராத்திரியில்‌ அவருடைய நடராஜர் அம்சத்தை மக்கள்‌ அனுபவ பூர்வமாக உணர்ச்சி நிலையில்‌ உணர்வதற்காக இவ்விழாவில்‌ பல்வேறு விதமான இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சிகள்‌ அரங்கேற்றப்படுகின்றன.



அந்த வகையில்‌ இந்தாண்டு பிப்‌.18-ம்‌ தேதி நடைபெறும்‌ மஹாசிவராத்திரி விழாவில்‌ தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம்‌, ராஜஸ்தான்‌ உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த பிரபல இசை கலைஞர்கள்‌ பங்கேற்க உள்ளனர்‌.

குறிப்பாக, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பிரபல நாட்டுப்‌புற கலைஞர்‌ வேல்முருகன்‌, ராஜஸ்தானி நாட்டுப்‌புற கலைஞர்‌ மாமேகான்‌, இசையமைப்பாளரும்‌, பிரபல சித்தார்‌ இசை கலைஞருமான நிலத்ரி குமார்‌, டோலிவுட்‌ பின்னணி பாடகர்‌ ராம்‌ மிரியாலா உள்ளிட்டோர்‌ பங்கேற்று பக்தர்களை இரவு முழுவதும்‌ விழிப்பாகவும்‌, விழிப்புணர்வாகவும்‌ வைத்து கொள்ள உள்ளனர்‌.



இது தவிர, கேரளாவைச்‌ சேர்ந்த 'தெய்யம்‌' நடன குழுவினர்‌, கர்நாடகாவை சேர்ந்த ஜனபாடா நாட்டு புற நடன கலைஞர்கள்‌, ஜார்ஜியாவைச்‌ சேர்ந்த நடன கலைஞர்களும்‌ விழாவை ஆட்டம்‌, பாட்டத்துடன்‌ அதிர செய்ய உள்ளனர்‌.



பிப்ரவரி 18ஆம்‌ தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வானது, மறுநாள்‌ காலை 6 மணி வரை நடைபெறும்.‌ இவ்விழா ஈஷாவின்‌ அதிகாரப்பூர்வ யூ - டியூப்‌ சேனலான Sadhguru Tamil–ல் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்‌.



மேலும்‌, தமிழ்‌, இந்தி, ஆங்கிலம்‌, தெலுங்கு, கன்னடம்‌, மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில்‌ முன்னணி தொலைக்காட்சிகள்‌ மற்றும்‌ யூ - டியூப்‌ சேனல்களிலும்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...