மகா சிவராத்திரி விழா - ஆட்டம், பாட்டம் என அதிரடியாக நடத்த தயாராகும் ஈஷா!

கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழாவிற்காக தமிழ் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் உள்பட பல்வேறு மொழி பாடகர்கள் மற்றும் நடன குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை ஈஷா மையத்தில் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாசிவராத்திரி விழாவை கோலாகலமாக நடத்த ஈஷா அமைப்பு தயாராகி வருகிறது.

இதுதொடர்பாக ஈஷா யோகா மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உலகில்‌ வேறு எந்த கலாச்சாரத்திலும்‌ இல்லாத வகையில்‌, நம்‌ தமிழ்‌ கலாச்சாரத்தில்‌ தான்‌ 'நடனம்‌ ஆடும்‌ ஒருவரை' கடவுளாகவும்‌ யோகியாகவும்‌ போற்றி கொண்டாடுகிறோம்‌.

இந்த முழு பிரபஞ்சமே ஒரு விதமான நடனத்தில்‌ இயங்குகிறது என நவீன அறிவியலாளர்கள்‌ கண்டறிந்துள்ளனர்‌. இதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உள்நிலையில்‌ உணர்ந்த யோகிகள்‌ பிரபஞ்ச கூத்தனான சிவனுக்கு சிதம்பரத்தில்‌ கோவில்‌ கட்டியுள்ளனர்‌.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்‌ மண்ணில்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழா கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மிக விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. சிவனுக்கு உகந்த இந்த ராத்திரியில்‌ அவருடைய நடராஜர் அம்சத்தை மக்கள்‌ அனுபவ பூர்வமாக உணர்ச்சி நிலையில்‌ உணர்வதற்காக இவ்விழாவில்‌ பல்வேறு விதமான இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சிகள்‌ அரங்கேற்றப்படுகின்றன.



அந்த வகையில்‌ இந்தாண்டு பிப்‌.18-ம்‌ தேதி நடைபெறும்‌ மஹாசிவராத்திரி விழாவில்‌ தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம்‌, ராஜஸ்தான்‌ உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த பிரபல இசை கலைஞர்கள்‌ பங்கேற்க உள்ளனர்‌.

குறிப்பாக, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பிரபல நாட்டுப்‌புற கலைஞர்‌ வேல்முருகன்‌, ராஜஸ்தானி நாட்டுப்‌புற கலைஞர்‌ மாமேகான்‌, இசையமைப்பாளரும்‌, பிரபல சித்தார்‌ இசை கலைஞருமான நிலத்ரி குமார்‌, டோலிவுட்‌ பின்னணி பாடகர்‌ ராம்‌ மிரியாலா உள்ளிட்டோர்‌ பங்கேற்று பக்தர்களை இரவு முழுவதும்‌ விழிப்பாகவும்‌, விழிப்புணர்வாகவும்‌ வைத்து கொள்ள உள்ளனர்‌.



இது தவிர, கேரளாவைச்‌ சேர்ந்த 'தெய்யம்‌' நடன குழுவினர்‌, கர்நாடகாவை சேர்ந்த ஜனபாடா நாட்டு புற நடன கலைஞர்கள்‌, ஜார்ஜியாவைச்‌ சேர்ந்த நடன கலைஞர்களும்‌ விழாவை ஆட்டம்‌, பாட்டத்துடன்‌ அதிர செய்ய உள்ளனர்‌.



பிப்ரவரி 18ஆம்‌ தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வானது, மறுநாள்‌ காலை 6 மணி வரை நடைபெறும்.‌ இவ்விழா ஈஷாவின்‌ அதிகாரப்பூர்வ யூ - டியூப்‌ சேனலான Sadhguru Tamil–ல் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்‌.



மேலும்‌, தமிழ்‌, இந்தி, ஆங்கிலம்‌, தெலுங்கு, கன்னடம்‌, மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில்‌ முன்னணி தொலைக்காட்சிகள்‌ மற்றும்‌ யூ - டியூப்‌ சேனல்களிலும்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...