அறிவித்த ஊதியம் ரூ.648.. ஆனா கிடைப்பதோ ரூ.421 தான்..! - கோவை மேயரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.648 சம்பளம் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரூ.421 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதால் அதிருப்தி அடைந்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: மாமன்றத்தில் நிறைவேற்றிய சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரை தூய்மை பணியாளர்கள், முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் அறிவித்த 721 ரூபாய் சம்பளத்தை வழங்கிட வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இந்த நிலையில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கப்பட்டது.

கோவை மாநகராட்சி விக்டோரியா மஹாலில் கடந்தாண்டு டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் சார்பில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ. 648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மாநகராட்சி மன்றத்தில் 648 ரூபாய் என அறிவித்துவிட்டு, 421 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த தூய்மை பணியாளர்கள், கோவை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோரை சூழ்ந்தனர்.



தொடர்ந்து மாமன்றத்தில் அறிவித்த சம்பளம் ஏன் வழங்கவில்லை என ஆணையாளரிடம் கேள்வி எழுப்பினர்.



பின்னர் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஆணையர் மற்றும் மேயரை முற்றுகையிட்டு அறிவித்த சம்பளம் கைக்கு வர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளம் வேண்டும் எனவும் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறுகையில், இ.எஸ்.ஐ, பி எப்., பணம் பிடித்தது போக தான் தற்போது சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் தூய்மை பணியாளர்கள் தீர்மானத்தில் அறிவித்த சம்பளம் கைக்கு வரவேண்டும் என தெரிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து, தூய்மை பணியாளர்கள் கூறுகையில், மாமன்றத்தில் அறிவித்த 648 ரூபாய் சம்பளம் தராமல் சம்பளத்தை குறைத்து தந்துள்ளனர். தற்போது 415 தான் கைக்கு வருகிறது. இரண்டு நேரம் வேலை வாங்குகின்றனர். தொழிலாளர்களை ஏமாற்றும் போக்கில் மாநகராட்சி செயல்படுகிறது.

தொழிலாளிகளின் உழைப்பை மாநகராட்சி சுரண்டுகிறது. தற்போது கூட்டமைப்பில் பேசி முடிவெடுத்து மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று எச்சரித்தனர்.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...