கோவை அருகே பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறிக்க முயற்சி - தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை!

கோவைப்புதூர் அருகே கொரியர் கொடுப்பது போல் வந்த நபர், திடீரென பெண்ணை கத்தியால் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அடுத்த கோவைப்புதூர் தில்லை நகரை சேர்ந்தவர் மோதிலால் ஐடி நிறுவன ஊழியர்.



இவரது மனைவி சங்கீதா (வயது40), இவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் வீட்டில் இருந்தபோது கொரியர் வந்ததாக சங்கீதாவை இளைஞர் ஒருவர் வெளியே அழைத்துள்ளார். அப்போது கொரியரை கொடுத்த அந்த நபர், சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார்.



அப்போது, சங்கீதா சத்தம் போட்டதால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்ததால், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதையடுத்து, சங்கீதாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தை அறுத்து செயினை திருட முயன்ற நபரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...