கோவை அருகே பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறிக்க முயற்சி - தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை!

கோவைப்புதூர் அருகே கொரியர் கொடுப்பது போல் வந்த நபர், திடீரென பெண்ணை கத்தியால் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அடுத்த கோவைப்புதூர் தில்லை நகரை சேர்ந்தவர் மோதிலால் ஐடி நிறுவன ஊழியர்.



இவரது மனைவி சங்கீதா (வயது40), இவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் வீட்டில் இருந்தபோது கொரியர் வந்ததாக சங்கீதாவை இளைஞர் ஒருவர் வெளியே அழைத்துள்ளார். அப்போது கொரியரை கொடுத்த அந்த நபர், சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார்.



அப்போது, சங்கீதா சத்தம் போட்டதால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்ததால், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதையடுத்து, சங்கீதாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தை அறுத்து செயினை திருட முயன்ற நபரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...