கோவை க.க.சாவடி கோயில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோவை க.க. சாவடி பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மாகாளியம்மன் கோயில் ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை பாலக்காடு சாலை க.க.சாவடி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில்.



இந்த கோவிலில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு கோவிலில் பூசாரி நடையை அடைத்து விட்டு சென்றுள்ளார்.

இன்று அதிகாலை கோவிலை திறந்து பூஜை செய்ய வந்தபோது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டது கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது, அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.



அதில், நள்ளிரவு சுமார் ஒன்றரை மணி அளவில் மர்ம நபர்கள் மூன்று பேர் கோவிலுக்குள் நுழைந்து, அங்கிருந்த உண்டியலை கடப்பாரை வைத்து உடைத்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.



மேலும் கொள்ளையடித்த பணம் நகை ஆகியவற்றை கோவிலில் இருந்த துணி ஒன்றை எடுத்து அதில் மூட்டையாக கட்டி இரு சக்கர வாகனம் மூலம் அவர்கள் தப்பிச் செல்வதும் பதிவாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள க.க.சாவடி காவல் நிலைய போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...