கோவை சூலூரில் சோளத்தட்டு ஏற்றிச்சென்ற லாரியில் திடீர் தீ விபத்து - பரபரப்பு

சூலூர் அருகே சோளத்தட்டு ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் ஏற்பட்ட தீவிபத்தில் லாரியின் பின்பக்கம் முழுவதும் தீக்கிரையான நிலையில் தீயணைப்பு துறையினர் ஜேசிபி உதவியுடன் சோளத்தட்டுகளை கீழே தள்ளி தீயை அணைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே சோளத்தட்டு ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் ஏற்பட்ட விபத்தில், ஒரு லட்சம் மதிப்பிலான சோளத்தட்டுகள் தீக்கிரையாகின.

சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் முருகசாமிக்கு சொந்தமான தோட்டத்திலிருந்து பாலமுருகேசன் என்பவர் சோளத்தட்டுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.



அப்போது தோட்டக் கலைத்துறை அலுவலகம் முன்பாக வந்த போது அங்கிருந்த தாழ்வான மின்கம்பியில் சோளத்தட்டுகள் உரசியதில், சோளத்தட்டுகளில் தீப்பற்றியது.



லாரியின் பின் பகுதியில் தீ மளமளவென பரவிய நிலையில், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாரியை ஒட்டி வந்த பாலமுருகேசன் உடனடியாக லாரியை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து லாரியில் இருந்து கீழே இறங்கிவிட்டு, சூலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் லாரியில் இருந்த சோளத்தட்டுகளை ஜேசிபி மூலம் கீழே தள்ளி பின்னர் தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் லாரி பின்பக்கம் முழுவதும் தீக்கிரையான நிலையில், ஒரு லட்சம் மதிப்பிலான சோள தட்டுகள் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...