பல்லடம் அருகே அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம விலங்கு - பரபரப்பு

பல்லடம் அடுத்த கரடிவாவி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் புகுந்த மர்ம விலங்கு ஒன்று கதவின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த கணினி உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம விலங்கால் மருத்துவர்கள் செவிலியர்கள் பீதி அடைந்தனர்.

பல்லடம் அருகே கரடிவாவி பகுதியில் கே.ஜி.எல் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு இந்த மருத்துவமனையில் உள்ள கதவின் கண்ணாடியை உடைத்து மர்ம விலங்கு ஒன்று உள்ளே புகுந்துள்ளது.



உள்ளே புகுந்த மர்ம விலங்கு மருத்துவமனையில் இருந்த கணினி மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இந்நிலையில் காலையில் பணிக்கு வந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனைக்குள் திருடன் புகுந்ததாக எண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த காமநாயக்கன் பாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு விலங்கின் கால் தடம் உள்ளே இருப்பதை கண்டுள்ளனர். மேலும் கதவை கடித்த பல் தாரை இருந்ததையும், கணினியை கடித்து வீசியதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.



இதனையடுத்து மருத்துவமனைக்குள் புகுந்தது மர்ம விலங்கு தான் என்று உறுதிப்படுத்தினர். இதனால் வனத்துறையினரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் இது மர்ம விலங்கின் செயல் என்று உறுதிப்படுத்தப்பட்டு இதற்கான விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் சிறுத்தை உலவுவதாக செய்தி வெளியான நிலையில் நேற்றிரவு மர்ம விலங்கு மருத்துவமனைக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மருத்துவமனையின் கட்டிடம் அனைத்து வசதிகள் கொண்டதாக இருந்தாலும் அதற்கான உபகரணங்களும் அதற்கான செயல்பாடுகளும் இன்றியும் சுற்றுச்சுவர் கூட இன்றி பழுதடைந்து உள்ளது.

மேலும் சிசிடிவி கேமரா இருந்தும் பயனில்லாமல் பதிவு செய்ய முடியாமல் செயலிழந்து உள்ளது. இந்த மருத்துவமனையை பாதுகாத்து தரம் உயர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...