கோவை குண்டுவெடிப்பு தினத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பிரமுகர் கைது!

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் இசக்கி ராஜா என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு.


கோவை: கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜ.க. உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதில் கலந்து கொண்ட தூத்துக்குடியைச் சேர்ந்தவரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனருமான இசக்கி என்ற இசக்கி ராஜா (37) என்பவர் இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, இசக்கிராஜா மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் இரு மதத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...