உடுமலை அருகே குளங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலையில் நீர்நிலைகளை பாழாக்கும் விதமாக குளங்களில் குப்பைகள் கொட்டுகின்றனர், சிலர் குப்பைகளை குளங்களின் ஓரங்களில் கொட்டி எரிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.


திருப்பூர்: உடுமலையில் நீர்நிலைகளின் அருகே குப்பைகளை கொட்டி தீ வைக்கப்படும் சம்பவங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, சமீப காலங்களாக நீர் நிலைகள் பாதுகாப்பில் காட்டப்படும் அலட்சியம் வருங்காலத்தில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அம்சமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

பல பகுதிகளில் உள்ள மழைநீர் ஓடைகள் சாக்கடைக் கால்வாய்களாக மாற்றப்பட்டு விட்டன. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் கலக்கப்படுவதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.

உடுமலை நகருக்கு அருகில் ஏழு குளப்பாசனக் குளங்களில் ஒன்றான ஒட்டு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் உபரிநீர் தங்கம்மாள் ஓடை வழியாக வழிந்து சென்று உப்பாறு ஓடையில் கலந்து உப்பாறு அணையை அடைகிறது.

இந்த குளத்தை நம்பி பல விவசாயிகள் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்துள்ளனர். இந்த குளத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது.

அதிலும் வெட்டி அகற்றப்பட்ட தென்னை மரங்கள், வாழை மரங்கள் போன்ற விவசாயக் கழிவுகளை டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் வந்து ஒட்டுக்குளத்துக்குள் கொட்டி விட்டுச் செல்கிறார்கள்.

மேலும் அவ்வப்போது இந்த கழிவுகளை தீ வைத்துக் கொளுத்தி விடுகிறார்கள். இதனால் குளத்து நீர் மாசடைவதுடன் காற்று மாசு ஏற்படவும் காரணமாகிறது.

இதுதவிர பல ஓடைகள் மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் கோழி கழிவுகள் மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டி நீர் நிலைகளைப் பாழாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. நீர் நிலைகளைப் பாழாக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நீர்நிலைகள் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல மீன்கள், தவளைகள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து விதமான உயிர்களுக்கும் பொதுவானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....