நீலகிரியில் குடியிருப்புகளை காலி செய்யும்படி நகராட்சி நிர்வாகம் உத்தரவு - பொதுமக்கள் சாலைமறியல்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கஸ்தூரிபாய் காலணியில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவிட்டுள்ள நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மத்திய பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



நீலகிரி: உதகை அருகே காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காலணியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்துவருகின்றன. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த மக்கள், ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உதகை நகராட்சி நிர்வாகம், அப்பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, விலங்குகள் மருத்துவ மையம் அமைக்க முடிவு செய்து குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.



இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய பேருந்து நிலையம் முன் இன்று சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த உதகை நகர போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கு வந்த உதகை வட்டாச்சியர் குடியிருப்புகள் காலி செய்யப்பட வேண்டியதில்லை எனக் கூறி சமாதானம் செய்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...