கோவை குப்பைத்தொட்டியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை மீட்பு - போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் திருமலைநாயக்கன்பாளையத்தில் குப்பைதொட்டியில் கிடந்த ஒன்றரை மாத ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையை வீசிச் சென்றவர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை திருமலைநாயக்கன்பாளையம் அருகே பெண் ஒருவர் குப்பைகளை பொறுக்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த சாக்கடை அருகே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

அவர் அங்கு சென்று பார்த்தபோது சுமார் ஒன்றரை மாதம் ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று குப்பையில் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அளித்த தகவலின் பெயரில், அருகில் இருந்து பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து குழந்தையை குப்பைத் தொட்டி அருகே வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பை தொட்டியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...