கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு தொடக்கம்

கோவை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு புதியதாக பல் மருத்துவர் நியமிக்கப்பட்ட நிலையில், பல் மருத்துவ சிகிச்சை பிரிவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. தாமோதரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை தொடங்கபட்ட பல் மருத்துவ சிகிச்சை பிரிவை எம்.எல்.ஏ தாமோதரன் இன்று திறந்து வைத்தார்.

கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் பல் மருத்துவர் பணியிடம் காலியாகவே இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக பல் சிகிச்சை பிரிவு தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

இதனிடையே பல் மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு மருத்துவரை நியமித்து மக்கள் நல்வாழ்வுதுறை சமீபத்தில் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு தொடங்கபட்டது.



இந்த நிலையில் இன்று பல் மருத்துவ சிகிச்சை பிரிவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வில் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் வேலுமணி உள்பட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...