கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு தொடக்கம்

கோவை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு புதியதாக பல் மருத்துவர் நியமிக்கப்பட்ட நிலையில், பல் மருத்துவ சிகிச்சை பிரிவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. தாமோதரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை தொடங்கபட்ட பல் மருத்துவ சிகிச்சை பிரிவை எம்.எல்.ஏ தாமோதரன் இன்று திறந்து வைத்தார்.

கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் பல் மருத்துவர் பணியிடம் காலியாகவே இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக பல் சிகிச்சை பிரிவு தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

இதனிடையே பல் மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு மருத்துவரை நியமித்து மக்கள் நல்வாழ்வுதுறை சமீபத்தில் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு தொடங்கபட்டது.



இந்த நிலையில் இன்று பல் மருத்துவ சிகிச்சை பிரிவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வில் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் வேலுமணி உள்பட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...