மின்வேலியில் சிக்கிய காட்டுயானை - நீலகிரி வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்பு!

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் மின்வேலியில் சிக்கி உயிருக்கு போரடிய காட்டு யானையை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி வனப்பகுதிக்குள் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: கேரளா, கர்நாடக மாநில எல்லையில் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஆயிரக்கணக்கான காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.

இந்த நிலையில் ஓம்கர் வன சரகத்திற்கு உட்பட்ட பார்கி வன பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று, அருகில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்தபோது மின்வேலியில் சிக்கியது. அப்போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி அந்த யானை கீழே விழுந்தது.

அதனை கண்ட நிலத்தின் உரிமையாளர் உடனடியாக மின்வேலிக்கான மின் இணைப்பை துண்டித்துவிட்டு, சம்பவம் குறித்துவனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.



விரைந்து வந்த வனத்துறையினர், மயங்கி விழுந்த யானையின் காலில் சுற்றி இருந்த மின் கம்பிகளை வெட்டி அகற்றினர்.



ஆனால், யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.



பின்னர் ஜெசிபி எந்திரத்தின் உதவியுடன் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக போராடி அந்த யானைக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வனத்துறையினர் காப்பாற்றினர்.



இதனைத் தொடர்ந்து, அந்த யானை வெற்றிகரமாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...