பொள்ளாச்சி பல்லடம் சாலையில் மதுபான கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - சார் ஆட்சியரிடம் மனு

பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் அமையவுள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மதுபான கூடம் அமைய உள்ளதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் LIC காலனி, குமரன் வீதி, மாரியம்மாள் லே - அவுட் குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மதுபான கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அதிகளவில் குடியிருப்புகளும் உள்ளது. எனவே மதுபான கடை அமைந்தால், மாண-மாணவிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

இதைக் கருத்தில் கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் இந்த பகுதியில் மதுபான கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனவும், எதிர்ப்பை மீறி மதுபானக்கூடும் தொடங்கினால் போராட்டங்கள் நடத்தப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...