பொள்ளாச்சி பல்லடம் சாலையில் மதுபான கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - சார் ஆட்சியரிடம் மனு

பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் அமையவுள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மதுபான கூடம் அமைய உள்ளதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் LIC காலனி, குமரன் வீதி, மாரியம்மாள் லே - அவுட் குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மதுபான கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அதிகளவில் குடியிருப்புகளும் உள்ளது. எனவே மதுபான கடை அமைந்தால், மாண-மாணவிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

இதைக் கருத்தில் கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் இந்த பகுதியில் மதுபான கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனவும், எதிர்ப்பை மீறி மதுபானக்கூடும் தொடங்கினால் போராட்டங்கள் நடத்தப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...