தாராபுரம் அருகே அலங்கியம் நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

அலங்கியம் நெடுஞ்சாலையில் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் வேகத்தடை அமைத்துத் தரக்கோரி விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் முத்து தலைமையில் 30-க்கும் மேற்பட்டடோர் கோட்ட பொறியாளர் ராணியிடம் மனு.


திருப்பூர்: தாராபுரம் நெடுஞ்சாலையில் இரு இடங்களில் வேகத்தடை அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் முத்து தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோட்ட பொறியாளர் ராணியை சந்தித்து வேகத்தடை அமைத்துத் தரக்கோரி மனு கொடுத்தனர்.



அந்த மனுவில், அலங்கியம் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலையில், உள்ள காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நியாயவிலைக்கடை, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.

நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் நியாயவிலைக்கடை பகுதியில் வேகத்தடை அமைத்துக் கொடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.



மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்ட பொறியாளர் ராணி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...