ஊட்டி அங்கன்வாடி மையங்களில் சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு!

அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஊட்டி வட்டாரத்தில் உள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் குறித்தும், அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: உதகையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகை விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் அத்துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு கலந்து கொண்டார்.



இதில் பள்ளிக்குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் காலை உணவுத்திட்டம் குறித்தும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், புதுமைப்பெண் திட்டம் செயல்பாடுகள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள குழந்தை இல்லங்கள் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்து, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்-2012, குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, ஊட்டி வட்டாரத்தில் உள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் குறித்தும், அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்திலும் ஆய்வு

மேற்கொண்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அம்ரித், சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோல்டிசாராள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...