மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக தோல் தானம் - மருத்துவர்கள் சாதனை!

மேட்டுப்பாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜ் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக தோல் தானம் பெறப்பட்டு மற்றொருவருக்கு பொருத்தப்பட உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக உயிரிழந்த நபரின் தோல் தானமாக பெறப்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (31). இவர், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் இன்று அவரது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.



இதனையடுத்து அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன்படி, உயிரிழந்த நாகராஜ் உடலில் இருந்து தோல் மற்றும் கண்களை தானம் செய்ய அவரது தாய் வள்ளி ஒப்புதல் அளித்தார்.



இந்நிலையில் கோவையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். உடல் உறுப்புகளை தகுந்த பாதுகாப்பு வசதியுடன் எடுத்து செல்ல கூடிய பெட்டிகளுடன் வந்த மருத்துவர்கள் நாகராஜின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

நாகராஜின் உடலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தோல் தீக்காயம் ஏற்பட்டு தோல் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் விபத்தில் சிக்கி பெரிய அளவில் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ பரிசோதனைக்கு பின் பொருத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை உருவாகிய 138 ஆண்டுகளில் இதுவரை தோல்தானம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...