போதைக்கு எதிராக உடுமலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்!

உடுமலை அருகேயுள்ள குரல்குட்டை பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஒருகோடி கையெழுத்து இயக்கத்தில், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்.



உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட குரல்குட்டை பகுதியில் போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் துவங்கி நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை மூத்த தோழர் தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார்.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நிர்வாகிகள் செந்தில்குமார், நிதிஷ், தர்சன், பிரபாகரன், செல்லமுத்து, சுர்ஜித் உட்பட மக்கள் மத்தியில் துண்டறிக்கை கொடுத்து கையெழுத்து பெற்றனர்.



குரல்குட்டை, நால்ரோடு, நெசவாளர் பகுதி, காமாட்சி அம்மன் கோயில் உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வரவேற்று கையெழுத்திட்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...