கோவை பன்னிமடை அருகே போர்வெல் குழாய்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை - பரபரப்பு!

பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, போர்வெல் குழாய்கள், வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு.


கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை அருகே வாழை தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை போர்வெல் குழாய்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு தேடி மலையடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, வரப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு அடிக்கடி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் உள்ள கணேஷ் என்பவரது தோட்டத்திற்குள் ஒற்றை காட்டு யானை புகுந்துள்ளது.



தோட்டத்தில் இருந்த போர்வெல் பைப்புகள், பில்டர் பைப்புகளை உடைத்த காட்டு யானை, 10க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது.



இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.



இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...